நாடு ஓர் உணர்வு
உணர்வை உரைக்க
மொழி ஒரு கருவி !!
தமிழ்
கருவிகளில் கரும்பு
கேட்பதால் கிறக்கம்
மொழிவதில் மெல்லிய மயக்கம் !!
தண்ணீர்
அருந்தும் போது ஆனந்தம்
தமிழ்
அறியும் போதே அமிழ்தம் !!
நம்மில் பலர்
ஊர் அறிய
உலகம் தெரிய அதை
தெள்ளென புரிய
வந்தது தமிழால் !!
ஆதலால்
போற்றுவீர் தமிழை !!
0 comments:
Post a Comment