எல்லாம் நடப்பது போலே நடக்கும்
ஆனால் உலகம் முழுதுமே
நமக்கெதிராய் இருப்பதுபோல் இருக்கும்
ஏக்கமாய்
அவள் கூறும் வார்த்தைகள்
அவனுக்கு கட்டளைகளாகும்
தூக்கத்தில்
அவள் உளறும் வார்த்தைகள்
அவனுக்கு கவிதைகளாகும்
நோக்கத்தோடு
அவள் கூறும் வார்தைகளே
அவனுக்கு எதிர்காலம்
அன்பில் பன்பில்
அழகில் அறிவில்
தன்னிலும் மேலானவரென்று
அவன் அவளையும்
அவள் அவனையும்
எண்ணி மோகம் கொள்வர் !
கண்கள் காணாத
நேரங்களில் சோகம் கொள்வர் !
கோபமென்பது வாராது
வந்தாலோ அவர்
வருந்தா வண்ணம் வேகம் கொள்வர் !
காதலை
சொல்ல காலமாகும்
வந்தவுடனே சொல்ல
காதல் என்ன மின்னலா
அல்ல
காதல் மேகம்
மேகம் உருவாக
நேரம் ஆகும் !
காதலை சொல்லுகையில்
இதயம் இருமடங்காய் இடியிடிக்கும்
காதலை சொன்னபின்
இதயம் அரைமடங்காய் அடங்கிவிடும்
காதல் என்பது காத்தல்
காதலியை நாம் காத்தல்
காதலியை நோக்க நாம் காத்தல்
காதலியிடம் உண்மை காத்தல் !
0 comments:
Post a Comment