ஊடல்

பொய்க்கோபம் பலவாகினும்
வாய்திறக்கும் உள்ளம்
மெய்கோபம் ஒன்றாயினும்
உள்ளடங்கி போவதேன்

உரசலில் தொடங்கும்
உடலில் முடியும்
உள்ளம் கரையும்

காலையின் சண்டை
கட்டிலில் சமரசம்
காதலர்க்கு கட்டிலே
ஐ.நா சபை

மாலையின் முறுக்கு
மல்லிகையில் மறைந்திடும்

உதயசூரியன் உதித்தபின்
உருவாகும் ஊடல்
ஆதவன் அடைந்தபின்
அப்படியே அடங்கிடும்

தொடங்கையில் கேள்விக்குறியாய் ?????
அடங்கையில் ஆச்சரியக்குறியாய் !!!!!!!!!

தொடங்கையில்
காட்டு கத்தலாய்
கோப சத்தம் .. !!!

அடங்கையில்
உச்ச ஸ்தாபியில்
முத்த சத்தம் …. !!!

கோபத்தில்
முளைத்த வார்த்தைகள்
வட்டியும் முதலுமாய்
கட்டிலில் முத்தமாய் !

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com