காற்றை உண்ண கூலி கேட்கும்
காலம் வராமல் பார்த்து கொள்வோம்
காற்றைத் தடுக்க வேலி போடும்
காலம் வராமல் பார்த்துக் கொள்வோம்
உடலில் குருதியை சுத்தப்படுத்தும்
உயிரை உள்ளே இருத்திவைக்கும்
காற்றில் நாம் மாசை புகுத்துகிறோம்
காற்றோ நம்முள் மாசை அகற்றுகிறது
இதுதான் அவர் நான நன்னயம் செய்து விடலோ
நேற்று
நாம் தோன்றும் முன்னரே தோன்றியது
நாளை
நாம் மறைந்தாலும் காற்று மறையாது
0 comments:
Post a Comment