பிறப்பிடம்

பிறந்த ஊர் பெருமை
பிரிந்த பின்னும் பின் தொடரும்

புகுந்த ஊர் பெருமை
புகுவதற்கு முன்வரை மட்டுமே

சொந்த ஊரின் சுதந்திரம்
புகுந்த ஊரில் காசுக்கு கிடைக்கும்

கோரைப்பாய் சுகம்மாறி
பட்டுமெத்தை பாடு படுத்தும் ..

பிறப்பிடம் நம்மை தேர்ந்தெடுத்தது
புக்கிடத்தை நாம் தேர்ந்தெடுத்தோம்

நம்மை தேர்ந்து எடுத்ததிடம் தான்
பாசத்தையும் பந்தத்தையும் பார்க்கலாம் ..

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com