இறைவன்

காட்டு மிரான்டிகளின்
கட்டுக்கடங்கா காட்டாறு

கைக் குழந்தையின்
கட்டுக்கடங்கும் பூப்பந்து

கும்பிட கோவில் செல்கிறோம்
கால் கடுக்க நிற்கிறோம்
உண்மையில்
உள்ளத்தில் உள்ளான்
வெளியில் தேடுகிறோம்

இறைவன்
ஒலிகளற்ற மொழி
ஒளியற்ற வெளிச்சம்
உணர்ச்சிகளற்ற உணர்வு
சிலைகலற்ற சிற்பம்..
சிலைக்குள் சிறைபடுத்தி
சிறுமை செய்யாதீர்
சிலைகள் வந்தது
கலைகள் வளரவே
ஒருவனே உள்ளானெனின்
ஓராயிரம் மதம் எதற்கு

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com