சம்பளம்

மூளை மூலதனத்தில்
உடல் உழைப்பில் வரும்
முதல் சம்பளம்
உள்ளம் உள்ளவரையும்
அறிவு அழியும்வரையும்
அப்படியே இருக்கும்


முதல் சம்பளத்தில்
வாங்கி வைத்திட்ட
முதல் பொருள்
மூச்சுமுட்டும் வரை
நம்மோடு மல்லுக்கட்டும்


முதல் சம்பளம்
கூட்டிடும் மனபலம்


முதல் சம்பளம் சிலருக்கு
முற்றிலும் சாமிக்கு சமர்ப்பனம்


சிந்திய வியர்வை
சம்பளமாய் சிந்தும்

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com