ஆசிரியர்

ஆசிரியம்
தொழில் அல்ல தர்மம்


தவறிப்போய் தவறுசெய்தால்
தனிமையில் தண்டிப்பார்
பொதுவினில் மன்னிப்பார்


நல்லாசிரியனுக்கு இலக்கணம்
மாணவ மணியின் மகிழ்ச்சி


பெற்றோரின் பாராட்டு


அன்பையும் அறிவையும்
பண்பையும் பனிவையும்
செவ்வனே கலந்து
செம்மையாய் புகட்டுவார்


குரு நிந்தனை நரகம்
குரு வந்தனம் மோட்சம்


தாய் நமக்கு உறவு புகட்ட
தந்தையை காட்டுகிறார்


தந்தை நமக்கு அறிவு புகட்ட
குருவைக் காட்டுகிறார்


குரு நமக்கு தெளிவு புகட்டி
நம்மையே காட்டுகிறார்


திரியில்லாமல் தீபம் ஏது ?
மாணவர் வாழ்வில் தீபம் ஏற்ற
ஆசிரியரே திரி ஆவார்


தீபம் ஒவ்வொண்றும்
ஒவ்வொருவிதம்
திரி இறுதிவரையில் திரியாமலே


ஆசிரியருக்கு மகிழ்ச்சி
மாணவன் பள்ளியில் போடும் சலாம் அல்ல
பள்ளியை விட்டு விலகியபின்னும் செலுத்தும் வணக்கம்
பணியில் அமர்ந்தபின்னும் தொடரும் தொடர்பு !


நிஜ ஆசிரியர்
பானையில் வன்னம் வரையமாட்டார்
களிமன்னை பானை ஆக்குவார் !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com