சுனாமி

மீண்டுமா …………..?


தாயே
உன்னை தலைவணங்குகிறோம்
நீ தலை தூக்காதே


கோபமா ….. ?
யார் மீது … ?
எம்மக்கள் மீதா .. ?
எம்மண்ணின் மீதா … ?


உம் முந்தைய கோபத்தின்
மீந்துபோன எச்சமே நாங்கள்


கடலில் அஸ்தி கரைக்க கடமைப்பட்ட
எங்களுக்கு
கடலில் உடலை கரைக்க வைக்காதே


நன்றி என்பது குன்றிப் போனதால்
உள்ளே இழுத்து உயிரை எடுத்து
உப்பு சேர்க்கிறாயா?
வாய்க்கு வெளியே துப்பாதே
வயிற்றுக்குள்ளேயே விழுங்கி விடு

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com