கடல்
சொல்லும் சேதி
கனக்கிலடங்கா
அலைகள் ஆடி ஆர்ப்பரிக்கும்
ஆழம் அடக்கமாய் இருக்கும்
கடல் ஆழத்தில்
உலகத்தின் ஓசைகள்
ஒடுங்கிப் போகும்
அலைகள் அடங்காது
அடிக்கடி வந்து போகும்;
காமமும் அப்படியே
ஆழம் அமைதியாய்
அப்படியே இருக்கும்;
காதலும் அப்படியே
அலைகள் அடங்காது
அலையை விடு
ஆழத்தை அடை
அமைதியை உணர்
ஆசைகள் அடங்காது
ஆசையை விடு
ஆன்மிகம் அடை
அமைதியை உணர்
முதல் உயிர்
பிறந்தது உன்னுள்
பரினாம பின்னனியில்
பின் பிறந்த
பிறப்பே நாங்கள்
நிலாவை கண்டால்
நெறுங்க நினைக்கிறாய்
அலை ஓசை
ஆனந்த இசை
0 comments:
Post a Comment