மூன்று முடிச்சின்
முதல் அங்கீகாரம்
பிறந்த வீட்டின் உறவு பிறிந்து
புகுந்த வீட்டின் பாரம் பகிர்வாள்
கணவனின் கனவுகளுக்காகவும்
குழந்தைகளின் கல்விக்காகவும்
அவள் ஆசைகளை
முலையிலேயே முறிப்பவள்
ஆதியிலேயே அறுப்பவள்
அவள் துயில் எழுந்தவுடன்
ஆதவன் தான் எழுவான்
அம்புலி தலை அடைந்ததும்
அவள் தான் துயில்வாள்
பிள்ளைகள் பிரியப்பட்ட நேரத்தில்
வயிற்றுப்பசி போக்கி
புருஷன் பிரியப்படும் நேரத்தில்
போர்வைப்பசி போக்கும்
அவள் பிரியம் யாரறிவார்
அவள் மனம் மட்டும் தான் அறியும்
பிறந்த போகையில்
குதித்திடும் கணவர்க்கு
பின்னொரு நாள் புரிந்திடும்
பிரிவின் போராட்டம்
வெறுமை என்பதை
வார்த்தையால் அறிந்தவர்
மனைவி மறைவில்
மனதால் உணர்வர் !
0 comments:
Post a Comment