வெளிமனம் மூட
உள்மனம் விழிக்க
தொடங்கிடும் தூக்கம்
தூக்கம்
சிலருக்கோ சொர்க்கம்
பலருக்கோ ஏக்கம்
நினைத்த நேரத்தில்
வந்தால் வரம்
நினையாத நேரத்தில்
அழையாத போழ்தும்
வத்தால் சாபம்
மாத்திரை விழுங்கி
நித்திரை வாங்குவார்
கோடிகள் சேர்த்தார்
நிலாவைப் பார்த்ததும்
நிம்மதியாய் உறங்குவார்
தெருக்கோடியை சேர்ந்தோர்
0 comments:
Post a Comment