கவிதையில் உன்னை
வர்ணிக்க காத்திருக்கையில்
மொழிகள் வார்த்தை வரத்து
இல்லையென்று ஒதுங்கி கொன்டன
மௌனம் முன்வந்து
கை கொடுத்தது..
அமைதி அடுத்து வந்தது !!
ஓவியமாய் வரைந்தாவது
வர்ணிக்க நினைத்தேன்
இயற்கை ஏளனமாய் கூறியது
என்னில்
எதை எடுப்பாய் ?
எதை விடுப்பாய் ?
என்று
வர்ணங்கள் பலதேடி
ஓய்ந்துப்போனேன்
இசையாய் இசைத்து
வர்ணிக்க விழைந்தேன்
இசைக்கருவிகள்
இது
எங்களால் இயலாது
என்று ஒதுங்கின
சிலையாய் செதுக்க
யத்தனித்தேன்
உலோகமும் உளியும்
ஓடி ஒளிந்தன
காற்றும் நதியும்
நாங்கள் இருக்கிறோம்
என்று
நம்பிக்கை தந்தன
மலையும் மடுவும்
காடும் கழனியுமே
கடைசியில் கை கொடுத்தன !!
1 comments:
mmm, interesting machan :)
Post a Comment