நீன்
உன்னை உலக அழகி
என்று என்னிக் கொள்கின்றாய்;
ஏன்
இப்படி விவரமறியா
பிள்ளையாய் இருக்கிறாயோ;
உலகத்தை விட
பெரிய பிரபஞ்சம் இருக்கையில்
உண்மையில் உன்னையே
ஏன் நீன்
சிறுமை படுத்திக்கொள்கிறாய் !!
‘ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
என்கிறார்களே
அப்படித்தானே நீங்களும்’
‘அடிக்கள்ளி………..
ஆசை அறுபது ஜென்மம்
மோகம் முப்பது ஜென்மம்
என்று சொல்லியிருந்தாலும்
நாம் அவற்றை
முறியடித்து முன்னேறுவோம் !! ’
தொலைதூரத்தில் இருக்கும் அவளிடம்
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டான் அவன்
இவன் அவள் பேசி கேட்கவும்
அவள் இவன் பேசி கேட்கவும்
தவமிருக்கிறார்கள்
பேசும் பாஷையோ மௌனம்
புரியும் அர்த்தமோ பற்பல
இதயங்களுக்கு இடையே
வார்த்தைகள் வழுக்கிவிழும்
காமுகர்கள்
இதயத்தை இரண்டாக்குவர்
காதலர்கள்
இதயத்தை ஒன்றாக்குவர்
கண்ணாடியில் கால்நொடிகூட நில்லாதவர்கள்
காதல் வந்ததும் கால்வலிக்க நிற்பார்கள்
கண்ணாடியில் தங்களையா காண்கிறார்கள்
தங்கள் காதலரையன்றோ காண்கிறார்கள்
உன்னைப் பார்க்கும் முன்வரை
பெண்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்
உன்னைப் பார்த்த பின்னும்
பெண்களை பார்த்து கொண்டிருக்கிறேன்
உன்னைப் பார்க்கும் முன்வரை
சிறந்த அழகியை தேடிக்கொண்டிருந்தேன்
உன்னைப் பார்த்த பிறகு
உன்னைப் பிறர் தொடுவது மிக அரிது
என்று உணர்ந்தேன் !!
0 comments:
Post a Comment