பத்து மாத பொறுமையின்
பொன் சித்திரம்
கருவிலிருந்து கடவுள்
தான் அழுது தரையிறங்கி
தாயென்ற ஸ்தானத்தையும்
தந்தையென்ற ஸ்தானத்தையும்
பகிர்ந்தளிக்கும் பகவான்
வாயில் மண்
கையில் கல்
கந்தலாய் துணி
விழியில் ஒளி
தாயுடன் அமர்ந்து
தந்தையை நோக்கி
அழுகையும் அழகாய்
சிரிப்பும் சாந்தமாய்
விழியெல்லாம் ஆச்சர்யமாய்
கோவில் கருவறையில்
உயிரில்லா கருங்கல் சிலை
பெண்ணின் கருவரையில்
உயிருள்ள கடவுள் சிலை
வெற்று பாத்திரமாய்
வந்து இறங்கி
வெற்றி பாத்திரமாய்
மாறப் போகும்
நாளைய நம்பிக்கை
குழந்தையை பற்றி
கவிதை எழுதுகையில்
வார்த்தைகள் வந்து விழாமல்
குழருகிறதே ஏன் ?
குழறல்தானே குழந்தை !!
குழந்தை முத்தம் குதூகலம்
கலங்கமில்லா பார்வையில்
கோபமும்
கரைந்து போகும்
கள்ளமில்லா சிரிப்பில்
உள்ளம்
கொள்ளைப் போகும்
தத்தி தத்தி
தவழ்ந்து தவழ்ந்து
தாயை சேர்ந்து
தன்உணவு அருந்தி
கனமே தூங்கும்
குழந்தையே கடவுள் !!
0 comments:
Post a Comment