வாழ்க்கையை விளக்க வார்த்தையா
வாழ்க்கை என்ன வாக்கியமா
வளைத்து நிறுத்த !
வாழ்க்கையை கற்க
கலாசாலை இல்லை
வாழ்க்கையில்
தோல்வியும் துரத்திடும்
வெற்றியும் வரும்
தீமையும் தொடரும்
நன்மையும் நடக்கும்
கசப்பும் கலந்திருக்கும்
இனிப்பும் இருக்கும்
காமமும் கொண்டிருக்கும்
காதலும் கண்ணடிக்கும்
வாழ்க்கை
வானவில்லாய் வண்ணமயமாயும் இருக்கும்
நிலவில்லா நாளாய் கரியிட்டும் இருக்கும்
மறந்து போய் பேச்சை நிறுத்தினால்
முடிந்திடும் வார்த்தை
மறந்து போய் மூச்சை நிறுத்தினால்
முற்றிடும் வாழ்க்கை
வாழ்க்கையை வாழ
வாழ்ந்தோர் வார்த்தைகள்
வழிநடத்த வேண்டும்
வழுக்கி விழுந்தோர் வார்த்தைகள்
வெளிச்சமிட வேண்டும்
வாழ்க்கை என்பது
வசதி அல்ல
நிம்மதி !
வாழ்க்கை என்பது
நேற்றும் இன்றும்
இப்பொழுதும் மட்டுமே..
நாளை என்பது
வாழ்க்கையா என்றால்
அதை நாமறியோம்
நாளைய பொழுதை மறந்து
இப்போதைய கணத்தை நினை
வாழ்க்கை ஒரு வரம்
வரம் ஒருமுறையே வரும் !
0 comments:
Post a Comment