மழை

மழை விசித்திரமானது

பெய்யெனப் பெய்து
வயல்களை விளைச்சலாக்கி
வாய்பிளக்கவும் வைக்கும்

பொய்யெனப் பெய்யாமல்
வயல்களை வறட்சியாக்கி
வாய்மூடவும் வைக்கும்

மழை இனிமையானது

மாலை வேளையில்
மலையில் நின்று
மேகம் பார்த்து
மழையில் நனைதல்
மனதை நிரப்பும் !

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com