மனவலி

உரைக்காத வரையில்
உணராது உலகம்

தெரியாத வரையில்
தேம்பாது கண்கள்

அழுகாத வரையில்
அனைக்காது கைகள்

வலியே வெறி
வெறியே வெற்றி

வீரனுக்கு
வெறிதான் வாழ்க்கை
வெற்றிதான் வரலாறு

சொல்பவன் சோர்ந்தவன்
செய்பவனை சார்ந்தவன்
வெல்பவனே வாழ்பவன்

வார்த்தை விழுந்து
உடைந்த மனம்
நேர்த்தி இழந்து
நொறுங்கி போகும்

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com