காந்தி தேசத்தில்
கோர ‘கோட்சே’ ;
புத்தர் தேசத்தில்
இனம் இரையாகிறது
அதைப் பார்த்து
ஒன்றும் செய்யமுடியாமல்
மனம் கறையாகிறது !!
காடுகளில் பயிற்சி
கவளவாய் சோறு ;
கண்களில் வெறி
மாய்ந்தே போனாலும்
மானமே பெரிது ;
மண்னே மானமென
வாழ்ந்த வீரர்கள் ;
கொன்று குவிக்கப்பட்டு
கிடத்தப் படுகிறார்கள்
புத்தர் காலடியில் !!
மௌனமாய் அழுகிறார்கள்
தமிழக மக்கள்
எதிர்த்து பேசினால்
இந்திய இறையான்மை
எதிர்க்கப் படுமாம் !
உயிரற்ற இறையான்மை
சாகக் கூடாதாம்;
உயிருள்ள இனம்
செத்து போகலாமாம்
கேட்பது யாரிங்கு ?
மௌனமாய் அழுகிறோம் !
0 comments:
Post a Comment