தோட்டம்
கட்டுரைகள்
படித்ததில் பிடித்தது
skip to main
|
skip to sidebar
பொன்னியின் செல்வன் - கவிதைகள் !
பிரிந்த காதல்
எந்தை இறந்தது ஈழத்தில்;
நுந்தை இறந்தது ஈழத்தில்;
நம் காதல் பிரிந்தது ஈழத்தில்!
இப்போதும்
தினமும் உன்னை
நினைத்து கொள்கிறேன்;
கனடாவில் இருந்து கொண்டு
ஜெர்மனியில் இருக்கும் உன்னை !
துப்பு கெட்ட அரசியல் வாதி
வாய்ப்பை விட்டு விட்டு
இப்போது வாலை துழாவவும்
யாரும் இன்றி !
ஈழ அமைதிக்கு
வாய்ப்புகள் வாய்த்தபோது
வாக்குகளை மட்டும் பார்த்துவிட்டு
வஞ்சித்து விட்டார்கள் !
அடுத்த தேர்தலில்
வால் நுனியை
மீண்டும் பிடித்து விடுவார்கள்
துப்பு கெட்ட அரசியல் வாதிகள் !
மரியாதை நிமித்தமோ
புத்தமும் யுத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.
சத்தமும் ரத்தமும்
இருக்கும் இடம் ?
லங்கா.
ராவனனுக்கும் ராஜபக்ஷேக்கும்
இடம் ?
லங்கா.
பிறகு ஏன்
பெயர் மட்டும்
ஸ்ரீ லங்கா ?
மரியாதை நிமித்தமோ !!
மௌனமாய் அழுகிறோம்
காந்தி தேசத்தில்
கோர ‘கோட்சே’ ;
புத்தர் தேசத்தில்
ராஜ பக்க்ஷே !
இனம் இரையாகிறது
அதைப் பார்த்து
ஒன்றும் செய்யமுடியாமல்
மனம் கறையாகிறது !!
காடுகளில் பயிற்சி
கவளவாய் சோறு ;
கண்களில் வெறி
மாய்ந்தே போனாலும்
மானமே பெரிது ;
மண்னே மானமென
வாழ்ந்த வீரர்கள் ;
கொன்று குவிக்கப்பட்டு
கிடத்தப் படுகிறார்கள்
புத்தர் காலடியில் !!
மௌனமாய் அழுகிறார்கள்
தமிழக மக்கள்
எதிர்த்து பேசினால்
இந்திய இறையான்மை
எதிர்க்கப் படுமாம் !
உயிரற்ற இறையான்மை
சாகக் கூடாதாம்;
உயிருள்ள இனம்
செத்து போகலாமாம்
கேட்பது யாரிங்கு ?
மௌனமாய் அழுகிறோம் !
Newer Posts
Older Posts
Home
மெயிலில் பெற
Enter your email address:
Delivered by
FeedBurner
பூச்சரம்
►
2024
(1)
►
November
(1)
►
2018
(1)
►
October
(1)
▼
2009
(75)
►
November
(1)
▼
October
(4)
பிரிந்த காதல்
துப்பு கெட்ட அரசியல் வாதி
மரியாதை நிமித்தமோ
மௌனமாய் அழுகிறோம்
►
July
(70)
பிற தோட்டம்
கட்டுரைகள்
படித்ததில் பிடித்தது
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.
View my complete profile