நான்,
நானாய் இருப்பது
அவளிடம் மட்டும்;
மிருகமாய் பல நேரம்
மிருதுவாய் சில நேரம்!
அவள்,
அவளைத் தொலைக்கிறாள்;
நான்,
அதைப் பார்க்கிறேன்;
அவள் கண்களில்,
நாணத்தை பார்க்கிறேன்;
அவள்,
'அவளை' தொலைத்து
என் 'நானை' காப்பாற்றுகிறாள்!
ஆனாலும்,
அவள் அவளாய் இருக்கிறாளா?
- பொன்னியின் செல்வன் -
2 comments:
உங்களின் நிறையக் கவிதைகளைப் படித்தேன். நன்றாக உள்ளது
_/!\_ உழவன் அவர்களே, வருக. மிக நன்றி! தொடர்ந்து வருக! கருத்தை தருக!
Post a Comment