Showing posts with label வீரமணி. Show all posts
Showing posts with label வீரமணி. Show all posts

தோளுண்டு தாள் தாங்க - ஆமாம் அப்படித்தான்!

அள்ளி அள்ளிக் கொடுத்த
வெள்ளியை கிள்ளவில்லை
தள்ளி நில் நீ என்று
டெல்லியில் இடம் ஒன்று கண்டு
எடைக்கு எடை தந்த
தங்கத்தை தொடவில்லை
அங்கத்தில் அணிந்தாரும் இல்லை
பாங்காய் கட்டிய கட்டடமே உண்டு!

வரித்துறை விதித்த பொய் வரியை
வரிக்கு வரி மறுத்து
உரிமைப் போர் புரிந்து
பெரியாரின் பொருளை
வட்டியும் முதலுமாய்
போராடிப் பெற்றதுண்டு!

கத்தி - மருத்துவ அறிவால்
இதயத்தை தொட்டது மும்முறை
சுத்தி-அரிவாள் - குழம்பிய அறிவால்
இதயத்தை தாக்கியது எம்முறை?

உலையில் போட்டு 
வெந்தால் சோறு
வந்தால் வரவு...
ஆம்,
இல் நீங்கி இல் வந்தால்
இல்லத்திற்கு வரவு
இல்லையேல்
இனத்திற்கு வரவு!

கொடும் சொல்லால் ஏசுவோர் உண்டு
கடும் சொற்கள்
வீசுவோர் உண்டு
கருத்தாவை விடு
கருத்தாக்கம் தொடு என;
நோயை விடு
நோய் முதல் நாடச் செய்து
ஆரியம் உருவாக்கும் மாயையை
கூரிய கருத்தால் ஓடச்செய்து
சீரிய பாடம் எடுக்கும் ஆசிரியர்!

தேர்க்காலும் புரவிக்காலும் தாங்குவது இழிவு
பழி நீங்க
தோளுண்டு தாள் தாங்க
பொதுநல வெற்றிக்காக..
சுயநல சுனாமி நாங்கள்
ஆமாம் அப்படித்தான்!

- ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து,
லண்டன்
 
Wordpress theme designed by antisocialmediallc.com